Jul 05, 2024
பணமின்றி நிறுத்தப்பட்டிருந்த வெகுஜன புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (04) முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.