May 17, 2024
தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தமிழர் சார்பில் பொது வாக்கெடுப்பாக அதைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை சில தரப்புகளினால் வற்புறுத்தப்பட்டு வருகின்றது. செயற்பாட்டு ரீதியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும், பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, பிரிந்து, துண்டுகளாகி, நலிந்து கிடக்கை யில் இந்த விஷப் பரீட்சைக்குள் தமிழினத்தைத் தள்ளும் பொறுப்பற்ற போக்கு முன்னெடுக்கப்படுகின்றது.