Nov 18, 2023
ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு?
நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.