Oct 08, 2023
இதே வழியில் பயணித்தால் ரயில்வே திணைக்களத்துக்கு ‘சங்கு’தான்…!
தமது தொழிலாளர் மற்றும் நாட்டின் பொதுநலன் கருதியே தொழிற்சங்கங்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், கடந்த 04 ஆம் திகதி ரயில்வே கட்டுப்பாட்டாளர்களால் தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.