Mar 19, 2024
வெளிக்கிளம்பும் மனித புதைகுழிகளும் புதைக்கப்படும் நீதியும்!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.